News November 17, 2025

தென்காசியில் ரயிலில் அடிபட்டு ஒருவர் உயிரிழப்பு

image

தென்காசி ரயில்வே நிலையத்தில் மேம்பாலம் அருகே (நவ.17) இன்று திங்கட்கிழமை சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். சம்பவ இடத்தில் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அருப்புக்கோட்டை பகுதியை சார்ந்த ரமேஷ் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News November 17, 2025

தென்காசி: வாடகை வீட்டில் இருப்போர் கவனத்திற்கு.!

image

தென்காசி மக்களே வாடகை வீடுகளில் குடியீருக்கீங்களா? 3 மாதத்துக்கு முன்னரே வீட்டு ஓனர் வீட்டு வாடகையை உயர்த்துவது (அ) முன்னறிவிப்பின்றி உங்களை தீடீரென்று வீட்டை காலி செய்ய சொன்னால் என்ன செய்வது என்று யோசீக்கிறீர்களா? இனி இதை பண்ணுங்க. உங்களுக்காகவே (TNRRLA 2017) என்ற சட்டத்தின் கீழ் தென்காசி வாடகை தீர்வாளர் அதிகாரியிடம் (9445000478, 9342595660) புகாரளியுங்க.மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News November 17, 2025

தென்காசி: 8ம் வகுப்பு PASS – ரூ.72,000 வரை சம்பளம்!

image

தென்காசி தமிழக நெடுஞ்சாலைத் துறையில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர், அலுவலக காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. 8ஆம் வகுப்பு தகுதி போதும்; (ஓட்டுநர்)இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் அவசியம். சம்பளம் ரூ.72,000 வரை. (வயது: 18–37). இதற்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்தெடுக்கப்படுவர். மேலும் விவரங்களுக்கு <>LINK<<>>ல் பார்க்கவும். விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். ஷேர்

News November 17, 2025

புதுப்பட்டியில் இளம்பெண் தற்கொலை

image

புதுப்பட்டியை சேர்ந்தவர் மாரி செல்வம் மனைவி அபிதா (21).இவர்களுக்கு 2மகன்கள் உள்ளனர்.கொத்தனார் வேலை பார்த்து வரும் மாரி செல்வம்குடிப்பழக்கம் உடையவர். இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது இதனால் மணமடைந்த அவர் இன்று (நவ.16) மாலையில் தனது வீட்டில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!