News September 9, 2025
தென்காசியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

தென்காசி மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கம் சார்பாக U-19 வீரர், வீராங்கனைகளுக்கான மாவட்ட அளவிலான போட்டி 14.09.2025 அன்று தென்காசி வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் நடைபெறுகிறது. இதில் விழுப்புரம் மாநில போட்டிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படுவர். 01.10.2006-க்கு பிறகு பிறந்தவர்கள் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு 9940949555 என்ற எண்ணிற்க்கு தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News September 9, 2025
கீழப்பாவூர் அருகே தீ விபத்து – 2 லட்சம் சேதம்

நாகல்குளம் ஆசாரி தெருவைச் சேர்ந்த நாகராஜன்(35), கீழப்பாவூர் அருகே முத்து பர்னிச்சர் ஒர்க் கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று அவரது கடையில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. அருகில் உள்ளவர்கள் தகவல் தெரிவிக்க, ஆலங்குளம் தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில், சுமார் 2 லட்சம் மதிப்பில் சேதம் ஏற்பட்டது. இருப்பினும் 3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தப்பியது.
News September 9, 2025
BREAKING தென்காசிக்கு வருகை தரும் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செப்.13 முதல் டிச.20 வரை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள உள்ளார். அதன்படி நவ.11 அன்று தென்காசி, விருதுநகர் மாவட்ட மக்களை சந்திக்க உள்ளார். இதற்காக பாதுகாப்பு கோரி காவல்துறையினரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
News September 9, 2025
தென்காசி மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு பதிவு

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலக சமூக வலைதளத்தில் இருந்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு செய்து பகிரப்பட்டுள்ளது. “சாலையில் நடக்கும் போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்” என்ற எச்சரிக்கை மற்றும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு செய்தியை புகைப்படத்துடன் அனைவரும் புரிந்து கொள்ளும்படி பகிர்ந்துள்ளது. *ஷேர்