News November 5, 2025
தென்காசியில் கால அவகாசத்தை நீட்டித்து ஆட்சியர் உத்தரவு.!

தென்காசி மாவட்டத்தில், உள்ள இதர பிற்படுத்தப்பட்டோர் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ், தேசிய கல்வி உதவித்தொகை பெற இணையதளத்தில் விண்ணப்பிக்க நவம்பர் 15ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 5, 2025
தென்காசி முதன்மை கல்வி அலுவலர் மாற்றம்

பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வரும் ரெஜினி இராமநாதபுரம் மாவட்டத்திற்கும் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வரும் அ. ரேணுகா தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
News November 5, 2025
தென்காசி: டிப்ளமோ போதும்; CHENNAI METRO வில் வேலை.!

தென்காசி மக்களே, சென்னை மெட்ரோவில் Supervisor மற்றும் Technician பணியிடங்களுக்கு ஏராளமான காலியிடங்கள் உள்ளன. ITI மற்றும் DIPLOMA முடித்தவர்கள் இந்த லிங்கை<
News November 5, 2025
தென்காசி: சிறையில் தற்கொலை செய்தவர் உடல் ஒப்படைப்பு

கடையநல்லூர் அருகே உள்ள காசிதர்மத்தைச் சேர்ந்தவர் வினோத் குமார் வயது 30. கூலி தொழிலாளியான இவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 14ஆம் தேதி சிறை கழிவறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்த அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்த நிலையில் பேச்சுவார்த்தை நடத்தி 21 தினங்களுக்கு பின் நேற்று உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


