News November 13, 2025

தென்காசியில் கடைகளுக்கு அபராதம்

image

தென்காசி நகராட்சி 29வது வார்டு சுவாமி சன்னதி பஜாரில் உள்ள கடைகளில் இன்று தென்காசி நகராட்சி சார்பில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் பயன்படுத்தும் கடைகளில் நெகிழிகள் பயன்படுத்தபடுகிறதா என சோதனை நடந்தது.
சுகாதார ஆய்வாளர் தலைமையில் நடந்த இதில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு நெகிழிகள் பயன்படுத்தும் கடைகளுக்கு சுகாதார ஆய்வாளரால் அபராதம் விதிக்கப்பட்டது.

Similar News

News November 13, 2025

செங்கோட்டை – திருநெல்வேலி செல்லும் பயணிகள் ரயில் ரத்து

image

செங்கோட்டை – திருநெல்வேலி வண்டி எண் ( 56742) செங்கோட்டையில் இருந்து திருநெல்வேலி செல்லும் ரயில் (நவ-13 முதல் 29) வரை , சேரன்மகாதேவி வரை மட்டும் செல்லும். அதேபோல் மறுமார்க்கமாக திருநெல்வேலி – செங்கோட்டை செல்லும் ரயில் வண்டி எண் ( 56743) திருநெல்வேலி – சேரன்மகாதேவி வரை மட்டும் செல்லும் . பராமரிப்பு பணி காரணமாக பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

News November 13, 2025

தென்காசி மாவட்டத்தில் இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று(நவ.11) இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News November 12, 2025

பாப்பான்குளம் பகுதியில் பிடிபட்ட மலைப்பாம்பு

image

பாப்பான்குளம் அருகே உள்ள சங்கரநாராயணர் சுவாமி கோவில் அருகே (நவம்பர் 12) இன்று சுமார் 10 அடி நீளம் உள்ள மலை பாம்பு இருப்பதை கண்ட அப்பகுதி பொது மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததன் பெயரில் சம்பவஇடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 10 அடி நீளம் பாம்பை பிடித்து வனத்துறையிடம் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

error: Content is protected !!