News January 21, 2026

தென்காசியில் கடைகளில் திடீர் சோதனை

image

தென்காசி நகராட்சி 29 வது வார்டு சுவாமி சன்னதி பஜார், மற்றும் 30வது வார்டு கீழ ரத வீதிகளில் உள்ள கடைகளில் நகராட்சி ஆணையாளர் உத்தரவு படி சுகாதார அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டது. மேலும் கடைகளில் நடத்திய சோதனையில் நெகிழிகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

Similar News

News January 22, 2026

தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

image

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று ஜன. 22 இரவு தென்காசி, புளியங்குடி சங்கரன்கோவில், ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News January 22, 2026

தென்காசி மக்களே., சம்பளம் சரியாக தரவில்லையா?

image

தென்காசி மக்களே, உங்களை முன்னறிவிப்பின்றி வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் நீங்கள் புகார் அளிக்கலாம். அதன்படி, வீட்டு வேலை செய்பவர்கள் நலவாரியம் – 04428110147, கட்டுமான தொழிலாளர் நலவாரியம் – 044-28264950, 044-28264951, 04428254952, உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் – 044-28110147. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

News January 22, 2026

தென்காசி இளைஞர்களே நாளை (ஜன 23) மிஸ் பண்ணாதீங்க

image

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் அமைந்துள்ள சர்தார் ராஜா பொறியியல் கல்லூரி வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை 23.02.2026 (வெள்ளிக்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெறுகிறது. எனவே வேலை தேடும் இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல வாய்ப்பினை வேலை நாடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!