News September 24, 2025
தென்காசியில் கஞ்சா செடி வளர்த்த நபர்

தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வேதம் புதூர் கிராமத்தில் வசித்து வருபவர் சாமிநாதன் என்பவரது மகன் திருமலை குமார் ஆட்டோ ஓட்டுனர். இவர் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதாக போலீசார்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. தென்காசி போலீசார் விரைந்து சென்று ஆய்வு செய்த பொழுது அவரது வீட்டில் 10 கஞ்சா செடிகள் வளர்ப்பது கண்டறியப்பட்டு அவரை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News September 24, 2025
ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்

ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் மீது மொத்தமுள்ள 15 பேரூராட்சி உறுப்பினர்களில் 12 பேர் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி கடந்த 10ந்தேதி மனு அளித்தனர். அதன்படி இதற்கான வாக்கெடுப்பு வருகிற அக்.9ந்தேதி காலை 11 மணிக்கு மன்றக்கூடத்தில் நடைபெறும் என பேரூராட்சி செயல் அலுவலர் பிரகந்தநாயகி அறிவித்துள்ளார்.
News September 24, 2025
தென்காசி: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

தென்காசி மக்களே, உங்களை முன்னறிவிப்பின்றி வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் நீங்கள் புகார் அளிக்கலாம். அதன்படி, வீட்டு வேலை செய்பவர்கள் நலவாரியம் – 04428110147, கட்டுமான தொழிலாளர் நலவாரியம் – 044-28264950, 044-28264951, 04428254952, உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் – 044-28110147. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!
News September 24, 2025
தென்காசி: சென்னை ரயில் பயணிகளுக்கு குட் நீயூஸ்

தென்காசி பாவூர்சத்திரம் கடையம் வழியாக செங்கோட்டை சென்னை சென்ட்ரல் இடையே இன்று முதல் சிறப்பு ஏசி ரயில் இயக்கப்படுகின்றன. சென்னை செங்கோட்டை சிறப்பு ரயில் புதன்கிழமை தோறும் சென்னையில் இருந்தும் வியாழக்கிழமை தோறும் செங்கோட்டையில் இருந்து சென்னைக்கும் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும் இந்த வழித்தடத்தில் முதல்முறையாக அனைத்து பெட்டிகளும் முழு குளிர்சாதன வசதி பெட்டிகளாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.