News October 17, 2024
தென்காசியில் இரவு ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள்

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம்(அக்.,17) இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் விபரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100 அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 28, 2026
தென்காசியில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி

இது நம்ம ஆட்டம் தென்காசி மாவட்ட அளவிலான போட்டிகள் ஜன. 31 அன்று கேரம், எறிபந்து ஆகிய போட்டிகள் மற்றும் பிப்.1 அன்று மாவட்ட விளையாட்டு வளாகம் மேலபாட்டக்குறிச்சியில் மணியளவில் நடைபெறவுள்ளது. மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தினை நேரிலோ அல்லது 04633-212580 (அ) 7806981962 என்ற அலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். மேற்காணும் தகவலை தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
News January 28, 2026
தென்காசி: ரேஷன் கடை வரிசையில் நிற்க வேண்டாம்

தென்காசி மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News January 28, 2026
தென்காசி மக்களே இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!

தென்காசி மாவட்டம், செங்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட இலத்தூர், தென்காசி சாலையில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமப்புற ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் கீழ் சிசிடிவி பொருத்துதல் மற்றும் பழுது நீக்குதல் பயிற்சி வகுப்பு பிப்ரவரி 2ம் தேதி துவங்க உள்ளது. இத்ற்கான முன்பதிவு தற்போது துவங்கியுள்ளது.


