News January 19, 2025

தென்காசியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

image

தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருவதால், இன்று(19/1/25) லேசானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தென்காசி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆகவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. SHARE IT.

Similar News

News September 30, 2025

தென்காசி: ஆடு ஏறியதால் மோதல்!

image

தென்காசி, கடையம் அருகே அழகம்மாள்புரத்தை சேர்ந்த முருகன் (42) வீட்டில் இசக்கி வளர்க்கும் ஆடுகள் கூரை மீது ஏறியதால் முருகன் தட்டி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த இசக்கி மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 5 பேர் முருகனையும் அவரது மனைவி மாரியம்மாள் மற்றும் குடும்பத்தினரையும் தாக்கினர். இதுக்குறித்து கடையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

News September 30, 2025

தென்காசி TNPSC தேர்வில் இத்தனை பேர் அப்செண்டா??

image

தென்காசி மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை ஞாயிற்றுக்கிழமை 11,993 பேர் எழுதினர். மொத்தம் 14,980 தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 2,987 பேர் தேர்வில் கலந்துகொள்ளவில்லை. 53 மையங்களில் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தேர்வு நடைபெற்றது. தேர்வு மையத்தை ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் சில தேர்வு மையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

News September 29, 2025

தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

image

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (29-09-25) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம், அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100 ஐ தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!