News September 2, 2025

தென்காசியில் அரசு வேலை APPLY NOW!

image

ஆலங்குளம், கடையம், கடையநல்லூர், கீழப்பாவூர், மேல நீலிதநல்லூர், சங்கரன்கோவில், செங்கோட்டை மற்றும் தென்காசி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றிய தலைப்பின் கீழ் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் அலுவலக உதவியாளர் இரவு காவலர் பணியிடங்களை இன சுழற்சி மூலம் பூர்த்தி செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. www.tnrd.gov.in என்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது செப்டம்பர் 1ம் தேதி 31 வரை விண்ணப்பிக்கலாம்.

Similar News

News September 2, 2025

கல்குவாரிகளின் அளவீடு அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு

image

தென்காசி மாவட்டத்தில் கல் குவாரிகளை ட்ரோன் மூலம் ஆய்வு செய்ய உத்தரவிடக் கோரி, புளியறை ஜமீன் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். 45 குவாரிகளில் 17 குவாரிகள் அளவீடு செய்யப்பட்டன. நீதிபதிகள், 17 குவாரிகளின் அறிக்கையை செப்.9க்குள் தாக்கல் செய்யவும், மீதமுள்ளவற்றை 4 வாரங்களுக்குள் அளவீடு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

News September 2, 2025

செங்கோட்டை ரயில் மாற்று பாதையில் இயக்கம்

image

செங்கோட்டை – மயிலாடுதுறை பயணிகள் ரயில் வண்டி எண்(16848) செப்டம்பர் மாதம் முழுவதும் பராமரிப்பு பணி காரணமாக மாற்றுப்பாதையில் செல்லவுள்ளது. புதன்கிழமை மட்டும் மதுரை வழியாகவும், மற்ற நாட்களில் அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, கீரனூர் , திருச்சி வழியாக செல்லும். இதை மற்றவர்களுக்கு *ஷேர் செய்யவும்.

News September 2, 2025

தென்காசி கம்மி விலையில் சொந்த வீடு வேணுமா??

image

ஒரு சொந்த வீடு என்பது ஒரு குடும்பத்தின் ஆயுள் கனவு. அதன் விலை எட்டாத உயரத்தில் உள்ளதால் பலருக்கும் அது இன்று வரை எட்டாத கனவு. இதை மாற்ற ஒரு வழி இருக்கு தென்காசி மக்களே! தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக அரசு மானிய விலையில் வீடுகள் வழங்குகிறது. ஆண்டு வருமானம் ₹3 லட்சம், சொத்து இல்லாதவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இங்க <>கிளிக்<<>> செய்து விண்ணப்பியுங்க.SHARE பண்ணுங்க..

error: Content is protected !!