News April 25, 2024

தென்காசி:சித்திரை பௌர்ணமி சிறப்பு பூஜை நடந்தது

image

குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோவிலில் சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு 23ம் தேதி காலை அபிஷேகம்,தீபாராதனை,நண்பகலில் உச்சிகால அபிஷேகம்,இரவில் சிறப்பு அபிஷேகம்,தீபாராதனை நடைபெற்றது.பின்னா், வில்லிசை நிகழ்ச்சி, இன்று அதிகாலையில் சித்திரைப் பெளா்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தொடா்ந்து, காலை 10.30 மணிக்கு தீா்த்தவாரி நடைபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு கோயிலில் பக்தா்கள் அதிகளவில் கலந்து கொண்டனர்.

Similar News

News January 31, 2026

தென்காசி அருகே கல்லூரி பேருந்து விபத்து!

image

ஆலங்குளம் பேருந்து நிலையம் முன், நேற்று சீதபற்பநல்லூர் தனியார் கல்லூரி பேருந்து மீது முத்துகிருஷ்ணப்பேரியைச் சேர்ந்த வேன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் வேன் டிரைவர் மனோகர், 10 மாணவர்கள் காயமடைந்தனர். படுகாயமடைந்த மனோகர், மாணவர் விக்னேஷ் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். லேசான காயமடைந்த மாணவர்கள் ஆலங்குளம் GH-ல் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து ஆலங்குளம் போலீசார் விசாரனை

News January 31, 2026

தென்காசி: மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

image

ஆலங்குளம் சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சார்ந்தவர் வசந்த் (30). சவுண்ட் சர்வீஸ் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு எதிர்பாராத விதமாக அவர் வீட்டில் வைத்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த ஆலங்குளம் காவல்துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்கு பாளையங்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

News January 31, 2026

தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

image

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (30-01-26) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம், அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி என் -9884042100  தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!