News March 25, 2025
தூய்மை பணியாளர்களுக்கு குடும்ப உதவி தொகை

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் தூய்மை பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தூய்மை பணியாளர்கள் நல வாரியம் சார்பில் வழங்கப்படும் குடும்ப உதவி தொகையாக கல்வி மற்றும் திருமண உதவி தொகைக்கான காசோலைகளை பயனாளிகளுக்கு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் இன்று வழங்கினார்.
Similar News
News November 6, 2025
நாகை மாவட்டத்தில் 1.07 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

நாகை மாவட்டத்தில், குறுவை நெல் சாகுபடி அறுவடை செய்யப்பட்டு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 123 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 1,07,764 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 23,146 விவசாயிகளிடமிருந்து நெல் வாங்கப்பட்டு, அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.256.67 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லில் 91,218 மெட்ரிக் டன் நெல் கிடங்குகள் அனுப்பப்பட்டுள்ளது.
News November 6, 2025
நாகை: மது போதையில் லாரியை திருடி நபர்

நாகை அடுத்த அகர கொந்தகை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது லாரியை திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தினேஷ்குமார்(38), என்பவர் மது போதையில் திருடி சென்ற போது, ஜிபிஎஸ் கொண்டு சக்திவேல் லாரியை டிராக் செய்து சிக்கல் பனைமேடு பகுதியில் லாரியை பிடித்தார். அதனைத் தொடர்ந்து நாகை நகர காவல் நிலையத்தில் தினேஷ்குமாரை ஒப்படைத்தார். பின்னர் சக்திவேல் அளித்த புகாரி பேரில் கைது தினேஷ்குமார் செய்யப்பட்டார்.
News November 6, 2025
நாகை: 10th போதும் அரசு வேலை-தேர்வு இல்லை!

அணுசக்தித் துறையில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாயுள்ளது
1. வகை: மத்திய அரசு
2. காலியிடங்கள்: 405
3. கல்வித் தகுதி: 10th & ITI Pass in respective trades
4.சம்பளம்: ரூ.9,600 – ரூ.10,560
5. கடைசி நாள்: 15.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க…


