News August 8, 2025
தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்!

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நாளை ஆகஸ்ட் 9ஆம் தேதி சனிக்கிழமை தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியம் சார்பில், தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. விழாவில் நல வாரியத்தின் தலைவர் டாக்டர் திப்பம்பட்டி ஆறுச்சாமி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை, வழங்க உள்ளார். இதில் ஆட்சியர் துர்கா மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
Similar News
News August 8, 2025
நாமக்கல் ஆட்சியர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி!

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி நாளை ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி, பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் நலன் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம், பேளுக்குறிச்சியில் பட்டா வழங்கும் நிகழ்ச்சி, உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சிகளில் பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.
News August 8, 2025
நாமக்கல் நான்கு சக்கர வாகன ரோந்து காவலர் விபரம்

நாமக்கல் மாவட்டத்தில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி இரவு 4 சக்கர வாகன ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் நாமக்கலில் தங்கராஜ் ( 9498110895), வேலூர் – சுகுமாரன் ( 8754002021), ராசிபுரம் – கோவிந்தசாமி ( 9498169110), திருச்செங்கோடு – வெங்கடாச்சலம் ( 9498169150), திம்மநாயக்கன்பட்டி – ஞானசேகரன் ( 9498169073), குமாரபாளையம் – செல்வராஜூ ( 9994497140), ஆகியோர் இரவு ரோந்து பணியில் உள்ளனர் .
News August 8, 2025
நாமக்கல் இரவு ரோந்து காவலர் விவரம் !

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இன்று ( ஆகஸ்ட்.8) மாவட்ட ரோந்து அதிகாரி- சுரேஷ்குமார் ( 9498168363), நாமக்கல் – லட்சுமணதாஸ் ( 9443286911), ராசிபுரம் – சுகவனம் ( 9498174815), திருச்செங்கோடு – ராதா ( 9498174333), வேலூர் – பொன்குமார் ( 6374802783) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.