News May 25, 2024
தூத்துக்குடி: 3 மாதத்தில் முடிக்க உத்தரவு

சத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற போது போலீசார் தாக்கியதில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்தனர். இரட்டை கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு 2020 இல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
Similar News
News March 29, 2026
BIG BREAKING தூத்துக்குடி: புதிய தமிழகம் தனித்து போட்டி

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பல்வேறு கட்சிகளும் தங்கள் வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை கிருஷ்ணசாமி சற்றுமுன் அறிவித்துள்ளார். இதில் ஒட்டப்பிடாரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் தான் ( கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ) போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
News March 29, 2026
BREAKING தூத்துக்குடி: த.வெ.க.,வேட்பாளர்கள் அறிவிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் த.வெ.க., 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறது. இந்நிலையில் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை சற்றுமுன் விஜய் அறிமுகம் செய்து வைத்தார். அதில்,
விளாத்திகுளம் – காசிராம்
தூத்துக்குடி – ஸ்ரீநாத்
திருச்செந்தூர் – முருகன்
ஸ்ரீவைகுண்டம் – சரவணன்
ஓட்டப்பிடாரம் – மதன்ராஜா
கோவில்பட்டி – பாலசுப்பிரமணியன்
News March 29, 2026
BREAKING தூத்துக்குடியில் தவெக சார்பில் பிரபல நடிகர் போட்டியா?

வரும் சட்டமன்ற தேர்தலில் தவெக 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறது. இந்நிலையில் 234 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை சென்னையில் உள்ள தனியார் விடுதியில் இன்னும் சற்று நேரத்தில் விஜய் அறிவிக்க உள்ளார். இதையடுத்து தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் நடிகர் ஸ்ரீநாத் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


