News March 6, 2025
தூத்துக்குடி: 3 துணை தாசில்தார்கள் தாசில்தார்களாக பதவி உயர்வு

தூத்துக்குடியில் மண்டல துணை தாசில்தாராக பணியாற்றிய ரமேஷ் இஸ்ரோ நிலம் எடுப்பு பிரிவு தாசில்தாராகவும், திருச்செந்தூர் மண்டல துணை தாசில்தார் சிவகுமார் திருச்செந்தூர் ஆதிதிராவிட நல தாசில்தாராகவும், ஸ்ரீவை., தாலுகா மண்டல துணை தாசில்தார் பாண்டியராஜன் தூத்துக்குடி அறநிலையத்துறை அலுவலக தாசில்தாராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவுகளை நேற்று(மார்ச் 6) கலெக்டர் இளம் பகவத் வெளியிட்டுள்ளார்.
Similar News
News March 6, 2025
தூத்துக்குடி மாவட்ட பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு

தூத்துக்குடி மாவட்ட சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 3ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 63 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இது சம்பந்தமாக கணக்கில் வராத பணத்தை வைத்திருந்ததாக மாவட்ட பதிவாளர்(தணிக்கை) சதாசிவம் உட்பட 2 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
News March 6, 2025
தூத்துக்குடியில் 392 பேர் +1 தேர்வு எழுதவில்லை

தமிழகம் முழுவதும் நேற்று(மார்ச் 5) +1 பொதுத் தேர்வு துவங்கி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் 19,766 இத்தேர்வு எழுத உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று நடந்த தமிழ் தேர்வில் மாவட்டத்தில் மொத்தம் 19 ஆயிரத்து 384 மாணவர்களே தேர்வு எழுதினர். 392 பேர் தேர்வு எழுதவில்லை என மாவட்ட கல்வி அலுவலகம் நேற்று தெரிவித்துள்ளது.
News March 6, 2025
கடைசி நேரத்தில் ரயிலில் பயணிப்போர் கவனத்திற்கு!

குமரி – பாலக்காடு, எர்ணாகுளம் ரயிலில் உள்ளிட்ட தென்னக ரயில்வேயின் 35 முக்கிய விரைவு ரயில்களில் டி ரிசர்வ் டிக்கெட் வசதி உள்ளது. இதன் மூலம் காலியாக செல்லும் படுக்கை பெட்டியில் பயணிக்க வசதி கிடைக்கிறது. இந்த வசதியை விரைவில் மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிக்கு விரிவுபடுத்த வாய்ப்பு உள்ளதாக தென்னக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. எல்லோரும் தெரிந்து கொள்ள மறக்காம ஷேர் பண்ணுங்க