News August 9, 2024
தூத்துக்குடி: 28ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

தூத்துக்குடியில் துறைமுக தொழிலாளர் கூட்டமைப்பு கூட்டம் ஆக.7, 8 ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது, துறைமுக தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஊதிய உயர்வு & பணப் பலன்களை வழங்காத மத்திய கப்பல் துறை அமைச்சகம் & மத்திய அரசை கண்டித்து வரும் 28ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.
Similar News
News November 4, 2025
தூத்துக்குடியில் பெண் சுடுமண் சிலை கண்டுபிடிப்பு

தருவைகுளம் அருகே உள்ள பட்டினமருதூரை தொல்லியல் களமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இப்பகுதியில் பொதுமக்கள் மார்பளவு கொண்ட சுடுமண் பெண் சிலை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த சுடுமண் சிலை பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உள்ளதாக இருக்கும் என்பதால் தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு நடத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News November 4, 2025
தூத்துக்குடி: இனி நீங்க வங்கி போக தேவை இல்லை!

தூத்துக்குடி மக்களே, உங்க வங்கில Balance எவ்வளவு இருக்கு? பண பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்க இனிமே வங்கிக்கும் இல்ல அடிக்கடி UPI – ஐ திறந்து பாக்க தேவை இல்லை
Indian bank : 87544 24242
SBI:  90226 90226
HDFC : 70700 22222
Axis : 7036165000
Canara Bank – 1800 1030
உங்க வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி உங்க அக்கவுண்ட் பேலன்ஸ், பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்கலாம். மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க…
News November 4, 2025
சாத்தான்குளம்: முருங்கைக்காய் திருடிய 3 சிறார்கள்

சாத்தான்குளம் அருகே உள்ள ஞானியார் குடியிருப்பை சேர்ந்தவர் பாஜக பிரமுகர் ராஜலிங்கம் . இவரது தோட்டத்திலிருந்து அடிக்கடி முருங்கைக்காய்கள் திருடு போயின. இதனையடுத்து நேற்று இவர் சோதனை செய்த போது இட்ட மொழியை சேர்ந்த 3 சிறார்கள் முருங்கைக்காய் திருட்டில் ஈடுபடுவது தெரிய வந்தது. மூன்று சிறுவர்களையும் பிடித்து சாத்தான்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


