News April 20, 2024

தூத்துக்குடி: 2 பேருக்கு அரிவாள் வெட்டு

image

பொட்டல்காடு அருகே உள்ள டீ கடை முன்பு சட்ட விரோதமாக, கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பிரேம்குமார்(19) என்பவரிடம் ஏற்பட்ட தகராறில் 4 பேர் கொண்ட கும்பல், அவரை அரிவாளால் வெட்டினர். இதை தடுக்க சென்ற டீக்கடையை சேர்ந்த வேல்ராஜ்(45) என்பவரையும் அரிவாளால் வெட்டி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இது குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை தேடி வருகின்றனர். 

Similar News

News February 17, 2026

தூத்துக்குடி: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்.!

image

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <>eservices.t police.gov.in<<>> என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News February 17, 2026

தூத்துக்குடி: கடலில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு.!

image

தூத்துக்குடி லயன்ஸ் டவுனை சேர்ந்த மீனவரான ஜான்சன், நேற்று முன்தினம் மாலை தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு ஒன்றில் வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, அவர் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கடலுக்குள் விழுந்துள்ளார். உடனடியாக அருகிலிருந்தவர்கள் கடலில் குதித்து அவரை மீட்க முயன்றனர். ஜான்சன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மரைன் போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 17, 2026

தூத்துக்குடிக்கு கனமழை எச்சரிக்கை – IMD

image

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் சூழலில், இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகையில் பிப்.21 ம் தேதி கனமழை பெய்ய கூடும். மறுநாள் 22ம் தேதி தென்காசி, குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. SHARE IT..

error: Content is protected !!