News December 5, 2025
தூத்துக்குடி: 10th போதும்.. அரசு வேலை., மீண்டும் வாய்ப்பு

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 14,967 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. விண்ணப்ப கடைசி தேதி டிச.4க்குள் முடிவடைந்த நிலையில், தற்போது கடைசி தேதி டிச.11 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 18 – 45 வயதுக்குட்பட்ட 10th, 12th, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் examinationservices.nic.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,000 – ரூ.2,09,200 வரை. இந்த நல்ல வாய்ப்பை SHARE செய்யுங்க
Similar News
News December 5, 2025
தூத்துக்குடி: கம்பால் அடித்து கொலை.. 2 பேருக்கு ஆயுள்

ஆறுமுகநேரி அருகே உள்ள அடைக்கலாபுரத்தை சேர்ந்தவர் அந்தோணிசூசை ராஜ். இவரை கடந்த 2017-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த அந்தோணிலிவிங்ஸ்டன், அன்றோ ஆகியோர் முன் விரோதம் காரணமாக கம்பில் அடித்து கொலை செய்தனர். இது பற்றி திருச்செந்தூர் போலீசார் இருவர் மீதும் தூத்துக்குடியில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததில் அன்றோ, அந்தோணி லிவிங்ஸ்டன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
News December 5, 2025
கம்பால் அடித்து கொலை செய்த 2 பேருக்கு ஆயுள்

ஆறுமுகநேரி அருகே உள்ள அடைக்கலாபுரத்தை சேர்ந்தவர் அந்தோணிசூசை ராஜ். இவரை கடந்த 2017-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த அந்தோணிலிவிங்ஸ்டன், அன்றோ ஆகியோர் முன் விரோதம் காரணமாக கம்பில் அடித்து கொலை செய்தனர். இது பற்றி திருச்செந்தூர் போலீசார் இருவர் மீதும் தூத்துக்குடியில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததில் அன்றோ, அந்தோணி லிவிங்ஸ்டன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
News December 5, 2025
தூத்துக்குடிக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (டிச.5) தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.


