News April 24, 2024
தூத்துக்குடி: வேன் பள்ளத்தில் கவிழ்ந்து 4 பேர் காயம்

சங்கரன்கோவில் பூவலிங்கபுரத்தை சேர்ந்த 25 பேர் ஒரு வேனில் ராமேஸ்வரம் சென்று விட்டு நேற்று இரவு ஊர் திரும்பி கொண்டு இருந்தனர். இவர்களின் வேன் எட்டையாபுரம் அருகே வரும் பொழுது எதிரே வந்த மினி லாரி மீது மோதி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து பற்றி எட்டையாபுரம் போலீசார் விசாரணை நடத்தினர்.
Similar News
News January 6, 2026
தூத்துக்குடி: இனி வரி செலுத்துவது ரொம்ப ஈஸி

தூத்துக்குடி மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம்.<
News January 6, 2026
தூத்துக்குடியில் வேலைவாய்ப்பு முகாம் – ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் இணைந்து தூத்துக்குடியில் ஜன.9 அன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. கோரம்பள்ளம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடைபெறும் இந்த வேலை வாய்ப்பு முகாமினை படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
News January 6, 2026
குறளாசிரியர் மாநாட்டில் பங்கேற்க கலெக்டர் அழைப்பு

திருப்பூர் மாவட்டத்தில் 21.01.2026 அன்று நடைபெறும் குறளாசிரியர் மாநாட்டில் பங்கேற்க அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் அழைப்பு விடுத்துள்ளார். இதற்காக 15 ஆசிரியர்கள், 15 அரசு ஊழியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வுக்கான எழுத்துத் தேர்வு 09.01.2026 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


