News December 24, 2025
தூத்துக்குடி: வெட்டிக்கொலை – கல்லூரி மாணவன் கைது!

ஆழ்வார்திருநகரி பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து (42) என்பவர் பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் இவர் அதே பகுதியை சேர்ந்த முத்து (21) என்ற கல்லூரி மாணவனுக்கு பணம் கடனாக கொடுத்ததில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் முத்து இசக்கிமுத்துவை நேற்று முன்தினம் இரவு ஓட ஓட வெட்டி கொலை செய்தார். வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வந்த போலீசார் முத்துவை நேற்றிவு கைது செய்தனர்.
Similar News
News December 24, 2025
தூத்துக்குடி: அரசு பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலா?

தூத்துக்குடி மக்களே, அரசு பேருந்துகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம். இங்கு <
News December 24, 2025
தூத்துக்குடி: சிறுமிக்கு பாலியல் தொல்லை – இளைஞர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் (21). இவர் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிந்து அரவிந்தை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
News December 24, 2025
தூத்துக்குடி போலீசாருக்கு கொலை மிரட்டல்; 4 பேர் கைது

தாளமுத்து நகர் எஸ்ஐ முத்துராஜா தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த சந்தேகத்துக்கிடமான 4 பேர் கொண்ட கும்பல் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தது. தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், மிரட்டல் விடுத்த விக்னேஷ், முத்து கணேஷ், கண்ணன், ரமேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


