News January 18, 2026

தூத்துக்குடி: வீடு கட்ட ரூ.2.50 லட்சம்.. EASY-ஆ விண்ணப்பிக்கலாம்

image

ஏழை எளிய மக்கள் வீடு கட்ட உதவும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.2.50 லட்சம் வரை மானியம் வழங்குகிறது. விண்ணபிக்க <>pmay-urban.gov.in<<>> என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அதில் உங்களுடைய முகவரி, வருமானம், ஆதார் உள்ளிட்ட விவரங்களையும் உள்ளீடு செய்து விண்ணப்பிக்கலாம். வீட்டில் விண்ணப்பிக்க இயலாதவர்கள் அருகே உள்ள இ-சேவை மையத்தில் பதிவு செய்யலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

Similar News

News February 10, 2026

தூத்துக்குடி: 25 ஆண்டுகள் தலைமறைவு; நேற்று கைது!

image

முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 1997ஆம் ஆண்டு நடந்த கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய திருநெல்வேலியைச் சேர்ந்த சேகர்(54), நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதையடுத்து 2001ஆம் ஆண்டு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. போலீஸார் நீண்ட தேடுதலுக்குப் பிறகு, தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் டிஎஸ்பி சுனில் மேற்பார்வையில் சேகரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News February 10, 2026

தூத்துக்குடி: பைக் விபத்து; சம்பவ இடத்திலேயே பலி..!

image

தூத்துக்குடி ஸ்பிக் நகர் அருகே பைக் நேருக்கு நேர் மோதிய விபத்தில் முத்தையாபுரம் எழில் நகரைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் அஜித்குமார்(22) என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மற்றொரு பைக்கில் வந்த அய்யன் கோவில் தெருவை சேர்ந்த செந்தூர்பாண்டி மகன் தனபால் என்பவர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News February 10, 2026

தூத்துக்குடியில் இரவு ரோந்து போலீசார் பட்டியல் வெளியீடு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு ரோந்து காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று இரவு ரோந்து காவல் அதிகாரியாக விளாத்திகுளம் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அசோகன் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் உள்ள அதிகாரிகள் தொடர்பு எண் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அவசர தேவைக்கு இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கூறப்படுகிறது.

error: Content is protected !!