News November 1, 2025

தூத்துக்குடி விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

தூத்துக்குடி வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி தெரிவித்துள்ளதாவது, புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம், மத்திய மாநில அரசுகளின் மானியத்துடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் உளுந்து, பாசி பயிர் செய்துள்ள விவசாயிகள் நவம்பர் 15ஆம் தேதிக்குள் மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர் செய்துள்ள விவசாயிகள் நவம்பர் 30ஆம் தேதிக்குள்ளும் பதிவு செய்ய கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News

News November 1, 2025

NOTE: தூத்துக்குடியில் 300க்கும் மேலான காலியிடங்கள்!

image

தூத்துக்குடி இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் நவ. 7ம் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 8 தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. 300க்கும் மேலான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10, 12, ITI, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் கல்வி சான்றுகளுடன் கலந்து கொள்ளலாம். இத்தகவலை உடனே SHARE பண்ணுங்க. வேலை தேடும் ஒருவருக்காவது உதவும்.

News November 1, 2025

தூத்துக்குடியில் 3 பேர் மீது குண்டாஸ்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த அக். 6ல் குலசைப் பகுதியில் நடந்த கொலை வழக்கில் நாசரேத் பகுதியை சேர்ந்த மூர்த்திராஜா (27), குலசை முத்துச்செல்வன் (27) கைதாகினர். ஆறுமுகநேரியில் கொலை முயற்சி வழக்கில் திருச்செந்தூரை சேர்ந்த சூர்யா (23) கைதாகினார். மேற்கண்ட 3 பேரையும் மாவட்ட எஸ்.பி ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய ம் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவிட்டார்.

News October 31, 2025

காவல்துறை சார்பில் விழிப்புணர்வு போட்டிகள்

image

சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று விளாத்திகுளம் புதூர் காவல் நிலையத்தின் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் புதூரில் மாணவர்களுக்கான ஓட்டப்பந்தயம், கட்டுரை போட்டி, மினிமரத்தான் உள்ளிட்ட விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது. தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி காவல்துறையினர் பாராட்டினர்.

error: Content is protected !!