News November 6, 2025
தூத்துக்குடி விமான நிலைய அதிகாரி பொறுப்பேற்பு

தூத்துக்குடி விமான நிலைய இயக்குனராக பணியாற்றி வந்த ராஜேஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து மைசூர் விமான நிலைய இயக்குனராக பணியாற்றி வந்த அனுப் என்பவர் தூத்துக்குடி விமான நிலை இயக்குனராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் நேற்று விமான நிலையத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு விமான நிலைய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.
Similar News
News November 6, 2025
தூத்துக்குடி: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் – புன்செய், கிராம நத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர், ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவசமாக அந்த இடத்திற்கு பட்டா பெறலாம். மேற்கண்ட தகுதிகள் இருந்தால் VAO-விடம் இதற்கான விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்புத் திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். எனவே இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!
News November 6, 2025
தூத்துக்குடி: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு! Apply பண்ணுங்க!

தூத்துக்குடி மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!
News November 6, 2025
தூத்துக்குடியில் ரூ.1.5 கோடி வரை மானியம் பெறலாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண் விளைப் பொருள்களுக்கு மதிப்பு கூட்டும் மையம் அமைக்க ரூ.1.5 கோடி வரை மானியம் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பதப்படுத்தும் தொழில் தொடங்கும் தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் சிறப்பு திட்டத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் அமல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


