News March 29, 2025
தூத்துக்குடி வருகிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு

கனிமொழி எம்.பி யின் பெருமுயற்சியினால் தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோருக்கான ‘புத்தொழில் களம்’ நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மையத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாட்டின் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொள்ள உள்ளார் என தூத்துக்குடி எம்.பி கனிமொழி அறிவித்துள்ளார்.
Similar News
News April 1, 2025
தூத்துக்குடி இரவு ஹலோ போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் இப்போது வெளியிட்டுள்ளது.
News March 31, 2025
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

சமீபகாலமாக ஆன்லைன் விளையாட்டுகள் மூலமாக மோசடிகள் பெருகி வருவது குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் துறை இன்று (மார்ச்.31) விழிப்புணர்வு செய்தி வெளியிட்டுள்ளது. அதில், “பண ஆபத்தை விளைவிக்கும் ஆன்லைன் விளையாட்டை விளையாடுவதை தவிர்ப்பீர்; உங்கள் பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்துவீர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. *நண்பர்களுக்கும் பகிர்ந்து உஷார் படுத்துங்கள்*
News March 31, 2025
தூத்துக்குடி : விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண் அடுக்கு திட்டத்தின்கீழ் விவசாயிகளின் நிலஉடைமை விவரங்கள் கிராமங்கள் தோறும் கட்டணமின்றி வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. பதிவு செய்யாத விவசாயிகள் ஆதார் எண் ,ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைபேசி, பட்டா நகளுடன் அணைத்து பொதுசேவை மையத்தில் ஏப்ரல் 15ம் தேதிக்குள் பதிவு செய்யவேண்டுமென வேளாண் இணை இயக்குனர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.