News November 30, 2025
தூத்துக்குடி: வடமாநில தொழிலாளிக்கு கத்திக்குத்து

கோவில்பட்டி பகுதியில் புதுடில்லியை சேர்ந்தவர் மாலிக். இவர் கோவில்பட்டியில் ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது அறையில் பாடலை சத்தமாக வைத்து கேட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை இவரது அறையில் தங்கியிருக்கும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த மோகன்ராஜ் தட்டி கேட்டதுடன் மாலிக்கை கத்தியால் குத்தியுள்ளார். இது சம்பந்தமாக கோவில்பட்டி மேற்கு போலீசார் மோகன்ராஜை கைது செய்தனர்.
Similar News
News December 1, 2025
தூத்துக்குடி: VOTER ID நம்பர் இல்லையா? – இதோ எளிய வழி!

தூத்துக்குடி மக்களே, உங்க VOTER ID எண் தெரியாதா? இதை யாருட்ட கேக்கன்னு தெரியலையா?? VOTER ID எண் இல்லாமல் கண்டுபிடிக்க வழி இருக்கு! இங்கு <
News December 1, 2025
கோவில்பட்டியில் நடந்து சென்றவருக்கு நேர்ந்த சோகம்

விருதுநகர் பரங்கிநாதபுரத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் பாலசுப்பிரமணியன் (65), உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு, கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றபோது, திடீரென மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை.
News December 1, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் கடும் குளிர் பதிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் ‘டித்வா’ புயல் காரணமாக நவம்பர் 27 முதல் சனிக்கிழமை வரை தொடர்ந்து மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழை இல்லாத ஞாயிற்றுக்கிழமை இரவில், வெப்பநிலை சுமார் 22 டிகிரிக்கு குறைந்ததால் தூத்துக்குடி மாநகரம் மற்றும் மாவட்டப் பகுதிகளில் கடுங்குளிர் நிலவியது. கடல் அமைதியாகக் காணப்பட்டது.


