News August 8, 2025

தூத்துக்குடி: ரேஷன் கார்டு வைத்திருப்போரின் கவனத்திற்கு….

image

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 2025 மாதத்திற்கான சிறப்பு முகாம் நாளை (ஆகஸ்ட்-9) காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறும். இம்முகாமில் மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம் உள்ளிட்ட குறைகளை பொதுமக்கள் சரிசெய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 8, 2025

தூத்துக்குடியில் சிவன் மீது சூரிய ஒளி விழும் அதிசய கோவில்

image

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் உள்ளது திருமூலநாதர் கோவில் எனப்படும் சிவன் கோவில். 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படும் இக்கோவில் நவலிங்கபுர சிவ ஆலயங்களில் முதலாவது ஆலயமாக போற்றப்படுகிறது. இந்த ஆலயத்தில் மார்ச் மாதம் 21, 22, 23 ஆகிய தேதிகளில் மூலவர் மீது சூரிய ஒளி படும் வகையில் கட்டப்பட்டுள்ளது பெரும் அதிசயமாகும். மனநலம் இதய நோய் உள்ளவர்கள் இங்கு வழிபட்டால் பினி தீரும் என்பது ஐதீகம்.

News August 8, 2025

தூத்துக்குடி பூசாரி கொலை: 17 வயது சிறுவன் கைது

image

தூத்துக்குடி, தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோட்டையன் தோப்பில், ஏ.சண்முகபுரத்தைச் சேர்ந்த கோவில் பூசாரி ரவி நேற்றிரவு மர்ம நபர்களால் வாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக தாளமுத்து நகர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, 17 வயது சிறாரை உடனடியாக கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து காவல்துறை மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 8, 2025

தூத்துக்குடி: டிகிரி படித்திருந்தால் உடனடி வேலை..

image

தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் நிறுவனத்திற்கு COMPUTER OPERATOR வேலைக்கு 25 காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ஊதியம் ரூபாய் 15,000 வரை வழங்கப்படுகிறது. எதாவது ஒரு டிகிரி படித்தவர்கள் இந்த <>லிங்கில்<<>> சென்று விண்ணப்பிக்கலாம். முன் அனுபவம் தேவையில்லை. *வேலை தேடும் நண்பர்கள்/ உறவினர்களுக்கு இதை ஷேர் செய்யவும்*

error: Content is protected !!