News January 24, 2026
தூத்துக்குடி: ரூ.3.44 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்!

புதூரில் முருகன் என்பவரது பெட்டிக் கடையில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர். இதில் அரசால் தடை செய்யப்பட்ட 50 புகையிலைப் பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, புதூர் போலீஸ் ஸ்டேஷன் அருகே அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது, 500 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, முருகனை கைது செய்த போலீசார், புகையிலை மற்றும் ரூ.3 லட்சத்த 44ஆயிரம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
Similar News
News February 8, 2026
தூத்துக்குடி எஸ்பி எச்சரிக்கை

தூத்துக்குடியில் நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு விசாரணைக்கு ஆஜராகாத 99 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 17 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 20 குற்றவாளிகள் மீது பிணைப்பத்திரம் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
News February 8, 2026
தூத்துக்குடி: 23 காலிபணிடங்களை அறிவித்த ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மற்றும் வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள 23 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு ஒப்பந்த முறையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் <
News February 7, 2026
தூத்துக்குடி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.


