News October 23, 2025

தூத்துக்குடி: ரூ.2 லட்சம் வரை சம்பளத்தில் வேலை

image

தூத்துக்குடி மக்களே, மத்திய அரசின் கீழ் செயல்படும் EMRS பள்ளிகளில் பல்வேறு பணிகளுக்கு இந்தியா முழுவதும் 7267 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு, 12th, டிப்ளமோ, டிகிரி, நர்சிங் என அந்தந்த பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி கொண்டிருக்க வேண்டும். சம்பளம் – ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை. இன்றே கடைசி தேதி ஆகும். மேலும் விவரங்களுக்கு <>இங்கு கிளிக்<<>> செய்யவும். இப்பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

Similar News

News October 23, 2025

தூத்துக்குடி: பெண் கட்டட தொழிலாளிக்கு கொலை மிரட்டல்

image

கோவில்பட்டியில் சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் கடைக்கு சென்ற பொழுது அதே பகுதியை சேர்ந்த தேவேந்திரன் என்பவர் இவரை அவதூறாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது சம்மதமாக கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து தேவேந்திரனை நேற்று கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

News October 23, 2025

தூத்துக்குடி இளைஞர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் சார்பில் ஒப்பனை, அழகுக்கலை, பச்சை குத்துதல் போன்ற பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 8-ம் வகுப்பு படித்த 18 – 35 வரை உள்ள இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு www.tandco.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

News October 22, 2025

தூத்துக்குடியில் கோவிலில் திருடிய 3 பேர் கைது

image

தூத்துக்குடி அருகே சிலுவைப்ட்டியில் உள்ள ஒரு விநாயகர் கோவிலில் கடந்த 18-ம் தேதி கோவிலில் இருந்த வெண்கல மணி, குத்துவிளக்கு, பூஜை பொருள்கள் மற்றும் ரூ.20000 ஆகியவை திருடு போனது. இது தொடர்பாக தாளமுத்து நகர் போலீசார் விசாரணை நடத்தி அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி, பால விக்னேஷ், முகேஷ் ஆகிய மூன்று பேரை கைது செய்து திருடு போன பொருட்களை மீட்டனர்.

error: Content is protected !!