News April 21, 2024
தூத்துக்குடி: ரவுடி அடித்துக் கொலை

தூத்துக்குடி அருகே உள்ள ஆர் சண்முகபுரத்தை சேர்ந்தவர் ரவுடி மாரியப்பன். நேற்று மாலை ஜாகிர் உசேன் நகரில் ஒரு முட்புதரில் நண்பர்களுடன் அமர்ந்து கஞ்சா அடித்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் இவரை அடித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடினர். இதுகுறித்து தாளமுத்து நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 9, 2026
தூத்துக்குடி: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

தூத்துக்குடி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே இங்கே <
News February 9, 2026
தூத்துக்குடி: பாலியல் குற்றவாளிகளுக்கு குண்டாஸ்.!

தூத்துக்குடி மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடி நகர்ப் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (26) மற்றும் போக்சோ குற்றவாளி இசக்கிமுத்து (45) ஆகிய இருவவரையும், மாவட்ட கண்காணிப்பாளர் சிலம்பரசன் பரிந்துரைப்படி, மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
News February 9, 2026
தூத்துக்குடி: மருமகன் தள்ளிவிட்டதில் மாமியார் பலி.!

முள்ளக்காடு அருகே உள்ள அத்திமரப்பட்டியை சேர்ந்தவர் பாப்பா (75). இவரது மகள் சுப்பு ராணியை முத்தையாபுரத்தை சேர்ந்த லிங்கதுரை திருமணம் செய்திருந்தார். சுப்புராணி இறந்து விடவே லிங்கதுரை இன்று மாமியார் வீட்டிற்கு வந்து மனைவியின் நகையை கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் லிங்கதுரை மாமியாரை தள்ளிவிட்டதில், அவர் கீழே விழுந்து உயிரிழந்தார். இது குறித்து முத்தையாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


