News April 19, 2025
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும் என்று உங்கள் தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்தாலோ அல்லது வாட்ஸ்அப் மூலமாக வரும் இணைப்புகளை கிளிக் செய்து, பாஸ்வேர்டு, பின் மற்றும் தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டாம் என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சைபர் புகார்களுக்கு அழையுங்கள் (1930)
Similar News
News November 9, 2025
தூத்துக்குடி மாநகராட்சி கடும் எச்சரிக்கை

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை வாகனங்கள் மூலம் நாள்தோறும் 180 டன் குப்பைகள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு மறுசுழற்சி செய்யப்பட்டு கையாளப்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் குப்பை கொட்டப்படுகிறது. எனவே இவ்வாறு மழைநீர் வடிகாலிகளில் குப்பை கொட்டும் பொது மக்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.
News November 9, 2025
தூத்துக்குடி: நுகர்வோருக்கு ரூ.50,000 இழப்பீடு; நீதிமன்றம் அதிரடி

தூத்துக்குடி மாவட்டம் குரங்கணி சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி இருந்தார். கடன் தொகை முழுவதும் செலுத்திய பின்னும் மூன்று மாதம் கூடுதலாக தவணைத் தொகை பிடிக்கப்பட்டது. இது சம்பந்தமாக முத்துக்குமார் தூத்துக்குடி நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் மனு அளித்தார். இதில் நிதி நிறுவனம் முத்துக்குமாருக்கு ரூபாய் 50000 வழங்க உத்தரவிடப்பட்டது.
News November 8, 2025
தூத்துக்குடி: காவல்துறை தேர்வுக்கு எஸ்பி அறிவுரை

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளைய தினம் காவல் மற்றும் தீயணைப்பு படையினருக்கான தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க உள்ள விண்ணப்பதாரர்கள் நாளைய தினம் கருப்பு நிற பால் பாயிண்ட் பேனாவை பயன்படுத்த வேண்டும். மேலும் ஆதார் அட்டை உள்ளிட்ட ஏதேனும் அரசு அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும். காலை 9:30 மணிக்கு முன்பு வரவேண்டும் என எஸ்பி ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.


