News March 26, 2025

தூத்துக்குடி மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு-நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் இப்போது வெளியிட்டுள்ளது.

Similar News

News March 29, 2025

தூத்துக்குடி நீதிபதி அதிரடி உத்தரவு

image

தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 15 பேர் ஜாமீன் பெற்றுக்கொண்டு பின்னர் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தனர். இது குறித்து விசாரணை நடத்திய தூத்துக்குடி நீதிபதி கனிமொழி இந்த வழக்குகளில் ஆஜராகாமல் உள்ள 15 பேரும் குற்றவாளிகள் தான் என நேற்று (மார்ச்-28) அதிரடி உத்தரவிட்டார்.

News March 29, 2025

தூத்துக்குடி: குடும்ப தகராறில் தீக்குளித்து தற்கொலை

image

செய்துங்கநல்லூர் அருகே உள்ள விட்டிலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவருக்கு ஈஸ்வரி (50) என்ற மனைவியும், 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் ஈஸ்வரி திடீரென மண்எண்ணையை ஊற்றி தீவைத்துக்கொண்டார். நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில் நேற்று (மார்ச்-28) அதிகாலையில் அவர் பரிதாபமாக இறந்தார். போலீசார் விசாரணையில் குடும்ப தகராறில் தற்கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

News March 29, 2025

தூத்துக்குடி வருகிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு

image

கனிமொழி எம்.பி யின் பெருமுயற்சியினால் தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோருக்கான ‘புத்தொழில் களம்’ நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மையத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாட்டின் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொள்ள உள்ளார் என தூத்துக்குடி எம்.பி கனிமொழி அறிவித்துள்ளார்.

error: Content is protected !!