News January 1, 2025

தூத்துக்குடி மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (ஜன01) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில்குறிப்பிட்டுள்ள காவல்துறையினரின் எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கக்கபட்டுள்ளது.

Similar News

News February 25, 2026

நல்லகண்ணுவிற்கு தூத்துக்குடி எம்.பி, அமைச்சர் இரங்கல்

image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த நல்லகண்ணு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று பிற்பகல் 1.55 மணியளவில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் இவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் தூத்துக்குடி எம்.பி கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

News February 25, 2026

நல்லகண்ணு மீசையை துறந்தது ஏன் தெரியுமா?

image

ஸ்ரீவைகுண்டத்தை சொந்த ஊராக கொண்ட நல்லகண்ணு பொதுவுடைமை கட்சியால் ஈர்க்கப்பட்டு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார். 1949-ம் ஆண்டு இவர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த பொழுது போலீசாரால் கைது செய்யப்பட்டார். அப்பொழுது போலீசார் இவரது மீசையை பொசுக்கியும் முடிகளை சிதைத்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதிலிருந்து நல்லகண்ணு தனது மீசையை துறந்து மீசை வைப்பதை விட்டு விட்டார் என்கின்றனர் அவரை அறிந்தவர்கள்.

News February 25, 2026

JUST IN சோகத்தில் மூழ்கிய ஸ்ரீவைகுண்டம் பகுதி

image

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் விவசாயக் குடும்பத்தில் 1925-ம் ஆண்டு ராமசாமி-கருப்பாயி தம்பதியின் மூன்றாவது மகனாக பிறந்தவர் நல்லகண்ணு. ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள காரனேஷன் உயர்நிலை பள்ளியில் பள்ளி படிப்பை முடித்த இவர் தமிழக அரசின் தலைசால் தமிழர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.தற்போது இவரது மறைவால் ஸ்ரீவைகுண்டம் பகுதியே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

error: Content is protected !!