News February 22, 2026
தூத்துக்குடி மாவட்டத்தில் 71 எஸ்ஐக்கள் பணியிட மாற்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 55 காவல் நிலையங்கள் உள்ளது. இந்த காவல் நிலையங்களில் 50-க்கும் மேற்பட்ட காவல் ஆய்வாளர்கள், 200-க்கும் மேற்பட்ட உதவி ஆய்வாளர்கள், சுமார் 3000 போலீசார் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் 71 உதவி ஆய்வாளர்களை நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்து டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News February 24, 2026
தூத்துக்குடி: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; கோர்ட் அதிரடி

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தில் கடந்த 2024 ம் ஆண்டு 14 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக, ஜெயக்குமார் (38) என்பவர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்திய நீதிமன்றம் அவருக்கு 27 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் இருந்து அழைத்து சென்று சிறையில் அடைக்கப்பட்டனர்.
News February 24, 2026
தூத்துக்குடி: துக்கம் தாளாமல் இளைஞர் தற்கொலை.!

நாசரேத் அருகே வெள்ளமடம் சுப்ரமணியபுரத்தை சேர்ந்த இளைஞர் ஜெயராஜ் (27). இவரது தந்தை ஆசீர் கனகராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காலமானார். தந்தை மீது மிகுந்த பாசம் கொண்டிருந்த ஜெயராஜ் அவர் இறந்த துக்கத்தில் இருந்து மீள முடியாமல் தவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வீட்டின் அறைக்குள் ஜெயராஜ் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில், நாசரேத் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News February 23, 2026
தூத்துக்குடி: சிலிண்டர் புக் பண்ண இனி MISSED CALL…!

தூத்துக்குடி மக்களே, (Bharatgas, HP, Indane) கேஸ் சிலிண்டர் புக் பண்ண இனி ஒரு மிஸ்டு கால் கொடுத்தா போதும்.
Bharatgas: 77150 12345
HP: 94936 02222
Indane:84549 55555
இந்த எண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் போது கேஸ் புக் பண்ண SMS உங்க போனுக்கு வரும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க


