News January 3, 2026

தூத்துக்குடி மாவட்டத்தில் 31 கொலைகள்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2025-ம் ஆண்டு பொது அமைதியாக இருக்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த வருடம் மட்டும் மாவட்டத்தில் 31 கொலை வழக்குகள் பதிவானதாக மாவட்ட காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 29 போக்ஸோ வழக்குகள், 138 குண்டர் தடுப்பு சட்டம், 218 பிடிவாரண்ட் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 10, 2026

தூத்துக்குடி: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா ?

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News February 10, 2026

தூத்துக்குடி: 25 ஆண்டுகள் தலைமறைவு; நேற்று கைது!

image

முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 1997ஆம் ஆண்டு நடந்த கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய திருநெல்வேலியைச் சேர்ந்த சேகர்(54), நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதையடுத்து 2001ஆம் ஆண்டு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. போலீஸார் நீண்ட தேடுதலுக்குப் பிறகு, தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் டிஎஸ்பி சுனில் மேற்பார்வையில் சேகரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News February 10, 2026

தூத்துக்குடி: பைக் விபத்து; சம்பவ இடத்திலேயே பலி..!

image

தூத்துக்குடி ஸ்பிக் நகர் அருகே பைக் நேருக்கு நேர் மோதிய விபத்தில் முத்தையாபுரம் எழில் நகரைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் அஜித்குமார்(22) என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மற்றொரு பைக்கில் வந்த அய்யன் கோவில் தெருவை சேர்ந்த செந்தூர்பாண்டி மகன் தனபால் என்பவர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!