News April 3, 2025

தூத்துக்குடி மாவட்டத்திற்கு விடுமுறை வழங்க எதிர்பார்ப்பு !

image

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதே போல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மக்களும் குலதெய்வ கோவிலுக்கு சென்று சுவாமி வழிபாடு செய்வதற்கு வசதியாக வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News November 6, 2025

தூத்துக்குடி: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு! Apply பண்ணுங்க!

image

தூத்துக்குடி மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!

News November 6, 2025

தூத்துக்குடியில் ரூ.1.5 கோடி வரை மானியம் பெறலாம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண் விளைப் பொருள்களுக்கு மதிப்பு கூட்டும் மையம் அமைக்க ரூ.1.5 கோடி வரை மானியம் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பதப்படுத்தும் தொழில் தொடங்கும் தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் சிறப்பு திட்டத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் அமல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 6, 2025

திருச்செந்தூர்: சரமாரியாக அடித்துக் கொலை

image

காயல்பட்டினத்தைச் சேர்ந்த சாகுல் ஹமீது (53) என்பவர் குலசை காவடிபிறை தெருவில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் அவருடன் பணியாற்றி வந்த முகமது ஹசன் (41) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவருடன் நடத்திய விசாரணையில் இருவரும் ஒன்றாக மது அருந்திய போது ஏற்பட்ட வாக்கு வாதத்தில் ஹாலோ பிளாக் கல்லால் சரமாரியாக அடித்து கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

error: Content is protected !!