News March 8, 2025
தூத்துக்குடி :மானிய எரிவாயு திட்டம் ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் மானிய விலையில் எரிவாயு சிலிண்டர் பெற்றவர்கள் முதல் சிலிண்டருக்கு பின் மாற்று சிலிண்டர்கள் பெறாமல் உள்ளனர். இவர்களுக்கு எரிவாயு நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளது. கடிதம் கிடைக்கப் பெற்ற 15 நாட்களுக்குள் பயனாளிகள் தங்கள் ஆதார் எண்ணுடன் தங்களது விவரங்களை முகவர்களிடம் புதுப்பிக்க வேண்டும். தவறினால் இணைப்பு துண்டிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 9, 2025
தூத்துக்குடி: தேசிய மக்கள் நீதிமன்றம்- ரூ-6 கோடிக்கு தீர்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர் ஆகிய மொத்தம் 13 அமர்வுகளுக்கான தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று (மார்ச்-08) நடைபெற்றது. மாவட்ட நீதிபதி வசந்தி தலைமையில் நடைபெற்ற இதில் மொத்தம் 3252 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு தீர்வு தொகையாக மொத்தம் ரூபாய் 6 கோடியே 62 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டது.
News March 9, 2025
தவறான வதந்திகளை பரப்புபவர்கள் மீதுகடும் நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் அணுக்கழிவு கொட்டுவதாக தவறான வதந்திகளை பரப்புபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இத்தகைய ஆதாரமற்ற வதந்திகளை நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என்றும் மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
News March 9, 2025
80 கோடி மதிப்புள்ள போதை பொருள் கடத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மாலத்தீவுக்கு சென்ற சிறிய ரக கப்பலில் ரூ.80 கோடி மதிப்புள்ள 30 கிலோ ஹசீஸ் என்ற போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மத்திய வருவாய் மற்றும் குற்ற புலனாய்வுத்துறையினர் நடுக்கடலில் பறிமுதல் செய்து , 11 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் துறைமுகப் பணியாளர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது.