News September 18, 2025
தூத்துக்குடி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. கலெக்டர் அறிவிப்பு

தூத்துக்குடிமாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, வேப்பலோடை, திருச்செந்தூர், நாகலாபுரம், ஏரல் அரசு ஐடிஐ-கள் மற்றும் தனியார் ஐடிஐகளில் அரசு ஒதுக்கீட்டில் நேரடி மாணவர் சேர்க்கையில் சேர கால அவகாசம் செப். 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 8, 10ம் வகுப்பு படித்தவர்கள் இதில் சேரலாம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள ஐடிஐ தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு நேரில் வர மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார். SHARE பண்ணுங்க.
Similar News
News September 18, 2025
தூத்துக்குடி: கல்குவாரியில் மூழ்கி தொழிலாளி பலி

தூத்துக்குடி மாவட்டம் அகிலாண்டபுரத்தை சேர்ந்த குருசாமி (35), அருகிலுள்ள கல்குவாரியில் குளிக்க சென்றுள்ளார். நீண்ட நேரம் அவரை காணவில்லை என்பதால் கயத்தாறு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின் கழுகுமலை தீயணைப்பு படையினர் தண்ணீரில் மூழ்கி குருசாமியை தேடும் பணியில் ஈடுப்பட்டனர். நேற்று மாலை 5 மணியளவில் குருசாமி உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து கயத்தாறு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
News September 18, 2025
சாத்தான்குளம் அருகே வாலிபர் தற்கொலை

சாத்தான்குளம் அருகே உள்ள பழங்குளம் கிராமத்தை சேர்ந்த ஜோஸ்வா லாரன்ஸ் (19) என்ற வாலிபர் கடந்த சில தினங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த அவர் இன்று அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து மெய்ஞானபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 17, 2025
BREAKING தூத்துக்குடி துறைமுகத்தில் 3 பேர் பலி

தூத்துக்குடியில் பழைய துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மிதவை கப்பலில் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். அப்போது விஷவாயு தாக்கி ராஜஸ்தானை சேர்ந்த சந்திப் குமார், தூத்துக்குடி மாவட்டம் புன்னகாயலை சேர்ந்த ஜெனிசன் தாமஸ், நெல்லை மாவட்டம் உவரி பகுதியைச் சேர்ந்த சிரோன் ஜார்ஜ் ஆகிய 3 பேர் விஷவாயு தாக்கி மூச்சு திணறி உயிரிழந்தனர். உடலை கைப்பற்றி மத்திய பாகம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.