News October 17, 2025
தூத்துக்குடி மக்களே மழை காலத்தில் கரண்ட் இல்லையா?

தூத்துக்குடி மக்களே தற்போது மழை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு பகுதியில் மின் விநியோகத்தில் பிரச்சனை எழும். அதனை சரி செய்ய லைன்மேனை நேரில் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் உடனடியாக லைன் மேன் வருவார். இதை உடனே எல்லோருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News October 17, 2025
தூத்துக்குடி: 2,708 காலியிடங்கள்.. ரூ.57,700 சம்பளத்தில் வேலை

தூத்துக்குடி மக்களே, தமிழக உயர்கல்வித்துறையில் காலியாக உள்ள 2,708 உதவி பேராசிரியர்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு பாடப்பிரிவுகளில் கீழ் தகுதியான நபர்கள் https://trb.tn.gov.in/ -ல் சென்று விண்ணப்பிக்கலாம். சம்பளம் : ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வரை வழங்கப்படும். இன்று முதல் 10.11.2025 வரை விண்ணப்பிக்கலாம். மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பு. எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
News October 17, 2025
திருச்செந்தூர் கோவிலில் 4,600 போலீசார் பாதுகாப்பு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி விழா வரும் 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இந்த திருவிழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கோட்டாட்சியர் கௌதம் தலைமை வகித்து கலந்து கொண்டார். கந்த சஷ்டி திருவிழாவில், 4,600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
News October 17, 2025
தூத்துக்குடி விவசாயிகளுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் நெற்பயிரில் தண்டு துளைப்பான் நோய் தாக்குதல் ஆங்காங்கே அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக நற்பயிரின் நடு குருத்து வாடி காய்ந்து விடும் எனவும் கூறப்படுகிறது. எனவே இதனை தடுக்க ஏக்கர் ஒன்றுக்கு ஒரு கிலோ 19.19.19 காம்ப்ளக்ஸ் உரத்தை விதை வழியாக தெளித்து வளர்ச்சியை மேம்படுத்தலாம் என கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். நம்ம ஊரு விவசாயிகள் பயன்பெற SHARE பண்ணுங்க.