News August 6, 2024

தூத்துக்குடி மக்களுக்கு காவல்துறையின் அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 06.08.2024 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அவசர காலத்திற்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Similar News

News October 17, 2025

தூத்துக்குடி விவசாயிகளுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் நெற்பயிரில் தண்டு துளைப்பான் நோய் தாக்குதல் ஆங்காங்கே அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக நற்பயிரின் நடு குருத்து வாடி காய்ந்து விடும் எனவும் கூறப்படுகிறது. எனவே இதனை தடுக்க ஏக்கர் ஒன்றுக்கு ஒரு கிலோ 19.19.19 காம்ப்ளக்ஸ் உரத்தை விதை வழியாக தெளித்து வளர்ச்சியை மேம்படுத்தலாம் என கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். நம்ம ஊரு விவசாயிகள் பயன்பெற SHARE பண்ணுங்க.

News October 17, 2025

தூத்துக்குடி: வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை

image

தூத்துக்குடி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை 9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இந்த செய்தியை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News October 17, 2025

தூத்துக்குடி: வீடுபுகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு

image

சாத்தான்குளம், நடுவக்குறிச்சியை சேர்ந்தவர் முத்துக்குமார் மனைவி அன்னலட்சுமி (50). இவர் வீட்டில் நள்ளிரவில் மர்மநபர் வீட்டிற்குள் புகுந்து வீட்டில் இருந்த ரூ.6,500ஐ திருடியுள்ளார். அதனை கண்ட அன்னலட்சுமி கூச்சலிட்டுள்ளார். உடனே, அந்த மர்மநபர், அன்னலட்சுமி கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியையும் பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டாராம். இதுகுறித்த புகாரின் பேரில் தட்டார்மடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!