News December 31, 2025
தூத்துக்குடி மக்களுக்கு காவல்துறை அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் நடைபெறுவதை முன்னிட்டு இன்று (31.12.2025) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெறவுள்ளது என மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
Similar News
News December 31, 2025
தூத்துக்குடி: அரசு அதிகாரி மர்ம மரணம்

ஆறுமுகநேரி பகுதியை சேர்ந்த கண்ணன் (55) குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றி வந்தார். இவருக்கு சொர்ணம் என்ற மனைவியும், பாலகிருத்திக் என்ற மகனும் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், தனது தந்தையை பார்க்க பாலகிருத்திக் நேற்று வந்துள்ளார். அப்போது வீட்டில் கண்ணன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 31, 2025
தூத்துக்குடி: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News December 31, 2025
தூத்துக்குடி போலீஸ் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் 2026 புத்தாண்டை முன்னிட்டு அனுமதியின்றி DJ பார்ட்டி நடத்துதல், பைக் ரேஸ், வீலிங், அதிவேக ஓட்டம், மதுபோதையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. புத்தாண்டு பாதுகாப்புக்காக 2500 போலீசார், சிசிடிவி, டிரோன் கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


