News January 14, 2026

தூத்துக்குடி: பொங்கல் பரிசு தொகையால் பறிபோன உயிர்

image

தூத்துக்குடி கந்தசாமிபுரத்தை சேர்ந்தவர் பூசாரி பாலமுருகன்(51). இவர் ரேஷன் கடைக்கு சென்று பொங்கல் பரிசு தொகை ரூ.3000, பொருட்களை வாக்கியுள்ளார். அதில் பொருளை மட்டும் வீட்டில் கொடுத்து பரிசு தொகையை வைத்து மது குடித்துள்ளார். இவரது மனைவி பரிசு தொகையில் வீட்டு செலவிற்காக ரூ.1000 கேட்ட நிலையில் இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கரும்பால் மனைவியை தாக்கிய பாலமுருகன் பின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Similar News

News February 7, 2026

தூத்துக்குடி: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் பெறலாம்..!

image

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 295 தபால் நிலையங்கள் உள்ளன. இங்கு இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18-65 வயது உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேரலாம். SHARE செய்து உதவுங்க.

News February 7, 2026

தூத்துக்குடி: அரசு அலுவலகத்தில் லஞ்சம் கேட்டால்..!

image

நில அளவை, பட்டா மாற்றம், வரி வசூல், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற நாம் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய தேவை உள்ளது. இந்நிலையில் தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் யாராவது தங்கள் பணியை சரியாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால், தூத்துக்குடி மாவட்ட மக்கள் 0461-2271143 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News February 7, 2026

தூத்துக்குடி: பள்ளி மாணவன் பரிதாபமாக பலி

image

தூத்துக்குடி டவுண் தனியார் பள்ளியில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்று விட்டு நேற்றிரவு திரும்பிக் கொண்டிருந்தபோது வள்ளியூர் நான்கு வழிச்சாலையில் பேருந்தின் பின் கதவு எதிர்பாராத விதமாக திறந்தது. படிக்கட்டு வழியாக 9ம் வகுப்பு மாணவன் நவீன் குமார் என்பவர் கீழே விழுந்ததில் பின்னால் இருந்து வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வள்ளியூர் போலீஸ் விசாரணை.

error: Content is protected !!