News January 27, 2026
தூத்துக்குடி: பேருந்து மோதியதில் ஒருவர் பலி

குரும்பூர் அருகே அழகப்பபுரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (49). திருச்செந்தூரில் ஹோட்டலில் வேலை பார்த்து வந்த இவர் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது குரும்பூர் மெயின் பஜாரில் சாலையை கடக்க முயன்ற போது திருச்செந்தூரில் இருந்து நெல்லை சென்ற தனியார் பஸ் இவர் மீது மோதியதில் பலத்த காயனடைந்த நிலையில் உயிரிழந்தார். இது குறித்து குரும்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 13, 2026
தூத்துக்குடி: பைக் விபத்தில் சம்பவ இடத்திலேயே பலி

முள்ளக்காடு ராஜுவ் நகரை சேர்ந்த சரண் டேவிட் உப்பளத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை வேலை முடிந்து தனது டூவீலரில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, திருச்செந்தூர் மெயின் ரோட்டில், எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சென்டர் மீடியனில் மோதியது. இதில் சரண் டேவிட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 13, 2026
தூத்துக்குடி: பைக் விபத்தில் சம்பவ இடத்திலேயே பலி

முள்ளக்காடு ராஜுவ் நகரை சேர்ந்த சரண் டேவிட் உப்பளத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை வேலை முடிந்து தனது டூவீலரில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, திருச்செந்தூர் மெயின் ரோட்டில், எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சென்டர் மீடியனில் மோதியது. இதில் சரண் டேவிட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 13, 2026
தூத்துக்குடி இரவு ஹலோ போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


