News August 31, 2024

தூத்துக்குடி பட்டாசு ஆலையில் விபத்து – 2 பேர் பலி

image

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே உள்ள குறிப்பன்குளம் கிராமத்தில் சிவசக்தி பட்டாசு ஆலை செயல்பட்டு வருகின்றது. இந்த ஆலையில், இன்று மாலை திடீர் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 2 பேர் பலியானதாகவும் சிலர் பலத்த காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News

News September 14, 2025

தூத்துக்குடி: காவலரின் கணவரிடம் அரிவாளில் வெட்டி வழிப்பறி

image

தூத்துக்குடி, எட்டயபுரத்தை சேர்ந்த ஜேசுராஜ் (47) என்பவர் மனைவி தமிழ்ச்செல்வி விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக உள்ளார். இவரது கணவன் ஜேசுராஜ் நேற்று முன்தினம் இரவு எட்டயபுரத்தில் நடந்து வந்து கொண்டிருந்த போது 3 பேர் கொண்ட கும்பல் அவரை அரிவாளால் வெட்டி 2300 பணத்தை ஜிபே மூலம் பறித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 14, 2025

தூத்துக்குடி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

image

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <>க்ளிக்<<>> செய்து அப்பளை பண்ணா போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 9489048910, 044-22280920 அழையுங்க… புதுமணதம்பதிகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு SHARE பண்ணுங்க…

News September 14, 2025

தூத்துக்குடி: 558 வழக்குகளுக்கு தீர்வு

image

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சார்பு நீதிமன்றத்தில் நேற்று (செப்.13) நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் கோவில்பட்டி சார்பு நீதிமன்ற நீதிபதி மாரிக்காளை தலைமையில், மாவட்ட உரிமையியல் நீதிபதி கருப்பசாமி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் (எண்.1) ஆனந்த், (எண்.2) மணிமேகலா ஆகியோர் முன்னிலையில்விபத்து வழக்கு, உரிமையியல் வழக்குகள், சிறு, குறு வழக்கு என 558 வழக்குகளுக்கு சமரசம் மூலம் தீர்வு காணபட்டது.

error: Content is protected !!