News December 20, 2025
தூத்துக்குடி: பட்டப்பகல் படுகொலை.. 2 பேர் அதிரடி கைது

சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுடலைமுத்து (30). கூலித் தொழிலாளியான இவரை சாத்தான்குளம் மதுபான பார் தொழிலாளர்கள் சுந்தர், ஜெகதீஷ் ஆகியோர் முன்விரோதம் காரணமாக நேற்று பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடினர். இந்நிலையில், சாத்தான்குளம் பகுதியில் பதுங்கி இருந்த இருவரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.
Similar News
News December 20, 2025
தூத்துக்குடி: கார் மோதி பெண் பரிதாப பலி

ஓட்டப்பிடாரம் அருகே சோழபுரத்தை சேர்ந்த சுடலை என்பவரின் மனைவி மருதக்கனி (46). இவர் நேற்று தேசிய நெடுஞ்சாலை பகுதியில் புற்களை அறுத்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மருதக்கனி மீது மோதியது. இதில், படுகாயமடைந்த மருதக்கனி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதில், கார் டிரைவரான தூத்துக்குடியை சேர்ந்த ரமேஷ்குமாரை (38) போலீசார் கைது செய்தனர்.
News December 20, 2025
தூத்துக்குடி: SIR-ல் உங்கள் பெயர் இருக்கா? CHECK பண்ணுங்க

தூத்துக்குடி வாக்காளர்களே, SIR பணிகள் நிறைவுற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. நமது மாவட்டத்தில் 1,62,527 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை பார்க்க <
News December 20, 2025
தூத்துக்குடியில் தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு…

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கு மொத்தம் 5,146 பேர் நாளை (டிச.21) தேர்வு எழுதுகின்றனர். இவர்கள் காலை 8 – 9.30 மணி, பிற்பகல் 2 – 3 மணிக்கு உள்ளாக மட்டுமே அனுமதிக்கப்படுவர். கருப்பு பேனா, ஹால் டிக்கெட், ஏதேனும் அரசு அடையாள அட்டை கொண்டு வர வேண்டும். செல்போன் போன்ற எலக்ட்ரிக் சாதனத்திற்க்கு அனுமதியில்லை போன்ற கட்டுப்பாடுகளை காவல்துறை வெளியிட்டுள்ளது.


