News March 24, 2025
தூத்துக்குடி: நோய் தீர்க்கும் குரங்கணி சாம்பார் சாதம்

தூத்துக்குடி மாவட்டம் குரங்கணியில் புகழ்பெற்ற முத்துமாலை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் அருகே கோவில் வீடு ஒன்று உள்ளது. இங்கு செவ்வாய்க்கிழமைகளில் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வருவர். கோவில் பூசாரி அவர்கள் மீது பூஜை செய்த தாமிரபரணி ஆற்று தீர்த்தத்தை தெளிப்பார். பின்னர் அங்கு சமைக்கப்பட்ட சாம்பார் சாதத்தை ஓலை பட்டையில் படைப்பார். இதை சாப்பிட்டால் நோய் தீரும் என்பது ஐதீகம். *நண்பர்களுக்கு பகிரவும்*
Similar News
News April 12, 2025
தூத்துக்குடி மாவட்ட ரோந்து போலீஸ் எண்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (ஏப்.11) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்துப் பணிகளில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 0461-2340393 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 9514144100 எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 11, 2025
திருச்செந்தூர் மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு

திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரசவ வலியால் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு முறையான சிகிச்சை அளிக்காமல் குழந்தை இறந்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் இன்று அமைச்சர் ம.சுப்பிரமணியம் திடீர் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளிடம் சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார்.
News April 11, 2025
BREAKING அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு கனிமொழி

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி உறுப்பினரும், தமிழக முதல்வரின் தங்கையுமான கனிமொழி ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை சிறிது நேரத்திற்கு முன்பு பதிவிட்டுள்ளார். அதில் “அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப்பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது என பதிவிட்டுள்ளார். இப்பதிவு பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.