News February 3, 2026
தூத்துக்குடி: தொழில் தொடங்க ரூ.3 லட்சம் கடன்

தூத்துக்குடி மக்களே, மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு மத்திய அரசு “உத்யோகினி யோஜனா” திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கடன் உதவி வழங்குகிறது. இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
Similar News
News February 11, 2026
தூத்துக்குடி மாவட்டத்தில் புதுவிதமான கொள்ளை!

திருச்செந்தூர் – ஆறுமுகனேரிக்கு வாடகை கார் ஒன்றை(பிப்.7) 4 பேர் அழைத்துள்ளனர். பின்னர் ஓட்டுநர் வேல்குமார்(55) என்பவரை, சீனந்தோப்பு அருகே காரை நிறுத்த கூறி, கைப்பேசி, ரூ.5000, 4 கி தங்க மோதிரத்தை பறித்துவிட்டு தப்பினர். போலீசார் சிசிடிவி மூலம் விசாரித்து, உவரியில் கலையரசன்(23), முத்துக்குமார்(19) ஆகியோரை கைது செய்து சிறை அடைத்தனர். பணம், மோதிரம் மீட்கப்பட்டது. தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.
News February 11, 2026
தூத்துக்குடி காவல் ரோந்து பணியில் சிக்கிய கஞ்சா

கோவில்பட்டி மது விலக்கு காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மதுவிலக்கு காவல் நிலைய ஆய்வாளர் மீஹா தலைமையில் போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது பாரதிநகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அப்பகுதியை சேர்ந்த பாலா மற்றும் காளீஸ்வரன் 1 1/2 கிலோ கஞ்சா வைத்து இருப்பது தெரிந்தது. இந்நிலையில் கைது செய்தனர்.
News February 11, 2026
தூத்துக்குடி: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு…

தூத்துக்குடியில் உள்ள நியாய விலை கடைகளில் பொருட்கள் வாங்கும் குடும்ப அட்டைதாரர்களிள் கைரேகை (Biometric) மற்றும் கருவிழி (IRIS) பதிவு சரியாக விழாதவர்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. முகாம் நடைபெறும் நாள்: 11.02.2026 (புதன்கிழமை); நேரம்: காலை 10.00 மணி முதல் 3.00 மணி வரை; இடம்: வட்டாச்சியர் அலுவலகம், தூத்துக்குடி.


