News March 17, 2026
தூத்துக்குடி துணை ஆணையர் அதிரடி சஸ்பெண்ட்

தூத்துக்குடி மாநகராட்சி துணை ஆணையர் சரவணக்குமார், பழைய திட்டங்களில் முறைகேடு புகாரால் விசாரணையில், நகராட்சி நிர்வாகத் துறை இயக்குனரின் உத்தரவால் அதிரடியாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். நாகர்கோவில், தஞ்சாவூர் மாநகராட்சிகளில் குப்பை உரமாக்கும் திட்ட உள்ளிட்ட பணிகளில் ஊழல் என்று ஊழல் தடுப்புப் பிரிவு வழக்கு பதிவு. நேற்று ஆணையர் பிரியங்கா நேரில் உத்தரவு நகலை வழங்கினார். விசாரணை தொடர்கிறது.
Similar News
News April 5, 2026
தூத்துக்குடி: போதை ஊசி மருந்து விற்ற 2 பேர் கைது

தூத்துக்குடியில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, வலி நிவாரணி மருந்துகளை போதை மருந்தாக விற்பனை செய்ய முயன்ற செய்யது இப்ராஹிம் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தாளமுத்துநகரைச் சேர்ந்த மருந்துகடை விற்பனையாளர் பாண்டிசெல்வி சட்டவிரோதமாக போதை மருந்துகளை விநியோகம் செய்தது தெரியவந்த நிலையில் அவரையும் போலீசார் கைது செய்தனர்.
News April 5, 2026
திருச்செந்தூர் அருகே சிலிண்டர் வெடித்து பயங்கர விபத்து.!

திருச்செந்தூர் அருகே உள்ள கீழ நாலுமூலைகிணறு அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த செல்வம் – சந்திமுத்து தம்பதி. கூலி தொழிலாளியான இவர்கள் ஷீட் அமைத்து வீடு கட்டி அதில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவரது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் வீட்டிலிருந்த 7 பவுன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் ஆகியவை கருகியது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News April 5, 2026
திருச்செந்தூர் அருகே சிலிண்டர் வெடித்து பயங்கர விபத்து.!

திருச்செந்தூர் அருகே உள்ள கீழ நாலுமூலைகிணறு அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த செல்வம் – சந்திமுத்து தம்பதி. கூலி தொழிலாளியான இவர்கள் ஷீட் அமைத்து வீடு கட்டி அதில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவரது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் வீட்டிலிருந்த 7 பவுன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் ஆகியவை கருகியது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.


