News March 30, 2024
தூத்துக்குடி: திருடிய வீட்டில் திருடன் செய்த காரியம்

சாத்தான்குளம் அருகே உள்ள சாலைப்புதூர் கிராமத்தை சேர்ந்த நீல புஷ்பம் (60) என்ற மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்த திருடன் அங்கே குளித்து இளைப்பாறி வீட்டிலிருந்த ரூ.2 லட்சம் மற்றும் நகைகளை மர்ம நபர் திருடி சென்று உள்ளார். இது குறித்து விசாரணை நடத்திய தனிப்படை எஸ்ஐ டேவிட் தலைமையிலான போலீசார் திருட்டில் ஈடுபட்ட ஜெயக்குமார் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News April 9, 2025
தூத்துக்குடி அருகே அடித்துக் கொலை

தூத்துக்குடி அருகே மேககூட்டுடன்காடு பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் மது போதையில் தனது மைத்துனர் ரமேஷ் வீட்டிற்கு சென்று 2 பவுன் தங்க சங்கிலி மற்றும் வீட்டின் சொத்து பத்திரத்தை கேட்டு ரமேஷின் தாயாரிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் கட்டையை எடுத்து வேல்முருகனை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த வேல்முருகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.
News April 9, 2025
போச்சோ வழக்கில் 3 மற்றும் 5 ஆண்டு சிறை

தூத்துக்குடி பகுதியில் சேர்ந்த 9 மற்றும் 15 வயது சிறுமிகளுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மறவன் மடத்தை சேர்ந்த ஜெயராஜ், சூரிய ராஜ் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜோஸ்வா ராஜ் ஆகியோர் மீது தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று ஜெயராஜ் மற்றும் சூரிய ராஜ்க்கு, 3 வருடம் சிறை தண்டனையும், ஜோஸ்வா ராஜ்க்கு 5 வருடம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
News April 9, 2025
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு செய்தியை வெளியிட்டுள்ளது. “தெரியாத நபர்களிடமிருந்து வரும் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம். ஒருவேளை இது சைபர் குற்றவாளிகள் உங்களுக்கு விரிக்கும் வலையாக இருக்கலாம்” என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு 1930 என்ற எண்ணில் (அ) cybercrime.gov.in தொடர்பு கொள்ளலாம்.