News January 20, 2026
தூத்துக்குடி: தாயை கொன்று கிணற்றில் வீசிய மகன்

விளாத்திகுளம் அருகே மிட்டாவடமலபுரத்தை சேர்ந்த பேச்சியம்மாள் ஜன.11 அன்று காட்டுப்பகுதியில் உள்ள கிணற்றில் கை, கால்கள் துணிகளாலும், உடல் கல் வைத்து கட்டப்பட்டு அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில் சொத்தை பிரித்து தரக்கோரி ஆத்திரத்தில் பேச்சியம்மாளின் மூத்த மகனான சக்திவேல், அவரது நண்பர் முருகன் ஆகியோர் கழுத்தை நெரித்து கொலை செய்து கிணறில் வீசியதாக தெரிவித்தது அதிர வைத்துள்ளது.
Similar News
News February 7, 2026
தூத்துக்குடி இன்று இரவு ஹலோ போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News February 6, 2026
தூத்துக்குடி: மாநகராட்சி பகுதிகளில் நாளை மின்தடை

தூத்துக்குடி மாவட்டத்தில் மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளதால் நாளை( பிப்ரவரி 7) தேதியில் மின்விநியோகம் இருக்காது. ஸ்டேட் பேங்க் காலனி, கந்தசாமிபுரம் , ஹவுசிங் போர்டு, ஆதிபராசக்தி நகர், போல் பேட்டை, மட்டக்கடை, டுவிபுரம், ஜெயராஜ் ரோடு, சிதம்பரம் நகர், பிரேம் நகர், தனசேகர் நகர், அண்ணா நகர், முனியசாமி புரம் மற்றும் அதை சுற்றிய வட்டார பகுதிகளின் நாளை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளன.
News February 6, 2026
தூத்துக்குடி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை SHARE பண்ணுங்க


