News May 20, 2024
தூத்துக்குடி: தலை நசுங்கி பலி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள தோப்பூர் விலக்கு பகுதியில் திசையன்விளையை சேர்ந்த வியாபாரியான மகாராஜன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் அவர் மீது மோதியதில் அவர் கீழே விழுந்து பின்னால் வந்த அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி பலியானார். இச்சம்பவம் குறித்து திருச்செந்தூர் போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 9, 2026
தூத்துக்குடி: இனி WHATSAPP-ல்.. பிறப்பு, இறப்பு, சாதி சான்றிதழ்!

தூத்துக்குடி மக்களே, பிறப்பு, இறப்பு, வருமானச் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ் என 50 வகையான அரசு சான்றிதழ்களை பெற இனி அரசு அலுவலகலகம் சென்று அலைய வேண்டியதில்லை. தமிழக அரசு மெட்டா நிறுவனத்துடன் இணைந்து 7845252525 என்ற வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்துள்ளது. தங்களுக்கு தேவையான சான்று பற்றி குறுஞ்செய்தியும், தகுந்த ஆதாரமும் அனுப்பினால் போதும். தேவையான சான்றிதழ் உங்கள் வாட்ஸ் அப்-க்கே வரும். SHARE பண்ணுங்க.
News March 9, 2026
தூத்துக்குடி: எம்ஜிஆரை மறந்த அதிமுக? சர்ச்சை போஸ்டர்

எட்டையாபுரத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டது. இதை ஒட்டி கோலம் போட்டிகள் நடைபெற்றது. இதற்காக அடிக்கப்பட்ட விளம்பர சுவரொட்டிகள் அதிமுகவின் நிறுவனத் தலைவர் எம்ஜிஆரின் படம் இல்லாமல் அச்சடிக்கப்பட்டு இருந்தது. இது அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியதுடன் இந்த போஸ்டர் தற்பொழுது இணையங்களில் வைரலாகி வருகிறது.
News March 9, 2026
தூத்துக்குடி: அண்ணன் குத்தி கொலை? தம்பி கைது!

தூத்துக்குடி பாத்திமா நகர் பகுதியை சேர்ந்த பார்த்திபன் மகன் பாலன் (28) மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் நேற்று மாலை தெரு பகுதியில் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவரது தம்பி டைசனுக்கும் (24) இவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், டைசன், பாலன் கழுத்தில் இரும்பு கம்பியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் பாலன் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் டைசன் கைது செய்யப்பட்டுள்ளார்.


