News January 15, 2025
தூத்துக்குடி: தம்பி தலையில் கல்லை போட்டு கொன்ற அண்ணன்

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சிவகலைப் பகுதியை சேர்ந்த ஹைகோர்ட் மகாராஜா(25) என்பவர், நேற்று(ஜன.14) காலையிலிருந்து மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த அவரது அண்ணன் லெட்சுமணன், தம்பி என பாராமல் மகாராஜாவின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துள்ளார். இது குறித்து ஏரல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News August 29, 2025
தூத்துக்குடியில் இரவு ரோந்து போலீசார் பட்டியல்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (28-08-2025) இரவு ரோந்து பணிக்கான காவல்துறை அதிகாரிகள் பட்டியல் மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டது. ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி நிரேஸ் இரவு ரோந்து அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் போலீசாரின் விவரங்களும், தொடர்பு எண்களும் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளன.
News August 28, 2025
BREAKING: தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் அதிரடி மாற்றம்

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக இருந்த பானோத் ம்ருகேந்தர் லால் இன்று (ஆகஸ்ட்.28) அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய ஆணையராக எஸ்.பிரியங்கா ஐஏஎஸ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
News August 28, 2025
வீட்டு வசதி வாரிய பயனாளிகளுக்கு நல்ல செய்தி

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீட்டு வசதி பிரிவு உட்பட்ட திட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் மனைகள் ஒதுக்கீடு பெற்று நிலுவைத் தொகை செலுத்த தவறிய தகுதியான ஒதுக்கீடு தருவதற்கு வட்டி தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே இந்த சலுகை வரும் 2026 மார்ச் 31 வரை மட்டுமே செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.